Friday 26 April 2013

போகப் போகத் தெரியும் - 49





   மீனா அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓக்காலித்து ஓக்காலித்து வாந்தி எடுத்தாள். வயிற்றில் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் வாய்  குமட்டி வாந்தி வருவது போலவே இருந்தது. வாயைக் கொப்பளித்து விட்டுத் திரும்பினாள். எதிரில் அகிலாண்டேசுவரி அம்மாள் என்ன என்பது போல் பார்த்தாள்.
   'உடம்பு சரியில்லையா..?"
   'இல்ல. நேத்துல்லாம் நல்லாத்தான் இருந்தேன். காலையில இருந்துத்தான் ஒரே கொமட்டலா வருது. ஏன்னே தெரியல."
   'குளிச்சி எத்தன நாளாவுது..?"
   'ஏன்.. நேத்துக்கூடக் குளிச்சேனே.. இன்னைக்கு ஒரே தலசுத்தலா இருக்குது. பொறுமையா குளி.."
   'ஏய்.. நா அத கேக்கல. வீட்டுக்கு தூரமானது எப்போ..?"
   மீனா யோசித்தாள்.. 'டெல்லியில இருந்து வந்த இந்த ரெண்டு மாசமா வரல.. ஆமா.. ஏன் வரல..?"
   மீனா யோசனையுடன் கேக்கவும் மாமியார் அதிர்ச்சியுடன் அவள் கையைப் பிடித்து இழுத்து வந்து அறையில் தள்ளித் தானும் நுழைந்து கதவைச் சாத்தினாள்.
   மீனா ஒன்றும் புரியாமல் நின்றிருந்தாள்.
   'மீனா.. நா சொல்லுறத கேளு. இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம். முக்கியமா சக்திக்குத் தெரியாமல் பாத்துக்கோ."
   'என்ன தெரிய வேணாம்..? புரியலையே.."
   'புரியலையா..? பாவி. உனக்கு ஒன்னும் புரியாது தான். நா அவ்ளோ சொன்னேன். அதையும் மீறி நீ இப்ப கர்ப்பமா வந்து நிக்கற. இப்பத்தான் எல்லாப் பிரட்சனையும் முடிஞ்சிது. திரும்பவும் பிரச்சனையா..?"
   'என்ன.. நா கர்ப்;பமா..?" மீனாவின் முகத்தில் ஆயிரம் மின்னல்கள்.
   'ஆமா.. அதுக்கூடத் தெரியலையா..? தோ பாரு. இப்ப இது வேணாம். இன்னும் ரெண்N;ட மாசம் தான். தோசம் முடிஞ்சதும் அப்புறம் நல்லா இருப்ப. அதனால இத கலச்சிடலாம்மா.."
   'என்ன..?" மீனா அவளை நிமிர்ந்து பார்த்தாள். குருடனுக்குப் பார்வை கொடுத்துக் கொஞ்சம் நேரத்துலேயே மீண்டும் குருடாக்கியது போல இருந்தது அவளுடைய நிலைமை.
   'ஆமாம்மா.. தோசம் வெலகுற வரைக்கும் உண்டாகம இருக்கணும்ன்னு ஜோசியர் சொல்லி இருக்காரும்மா. அதுக்கு தான் சொல்லுறேன். யாருக்கும் தெரியாம நாம ரெண்டு பேரும் மட்டும் போயி டாக்டர பாக்கலாம்.. என்ன..? "
   'முடியாது" மீனா தீர்மானமாகச் சொன்னாள்.
   'மீனா புடிவாதம் புடிக்காத. சத்திவேலுக்கு இருவத்தியெட்டு வயசுக்குள்ள புள்ள பொறந்தா.. அது இந்த குடும்ப வாரிச அழிச்சிடும்ன்னு சொல்லியிருக்காரு. உன்னோட பொறக்காத புள்ளைக்காக என்னோட புள்ளையப் பலி குடுக்க மாட்டேன்." அதிகாரமாகச் சொன்னாள்.
   அதற்குள் யாரோ கதவைத் தட்டினார்கள். 'மீனா.. இங்க நடந்தது வெளிய யாருக்கும் தெரிய வேணாம்." சொல்லிவிட்டுக் கதவைத் திறந்தாள். சக்திவேல் நின்றிருந்தான்.
   'மீனாவுக்கு உடம்பு சரியில்லன்னு கமலா சொன்னுச்சி. என்ன அவளுக்கு..?"
   மீனாவிடம் வந்தான். 'என்னாட்சி..?" கேட்டான். மீனா மாமியாரைப் பார்த்தாள்.
   'ஒன்னுமில்லப்பா.. வயறு சரியில்லையாம். அதான் என்னன்னு கேட்டேன். நீ போ. நா பாத்துக்கறேன்."
   அவன் மீனாவைத் திரும்பிப் பார்த்தான். அவளுடைய கண்களில் தெரிந்த கலக்கம் அவனை அங்கிருந்து போக விடாமல் தடுத்தது.
   'என்ன மீனா.. எதுவாயிருந்தாலும் சொல்லு. டாக்டர வேணும்ன்னா வீட்டுக்கு வர சொல்லவா..?"
   'வேணாம்.." என்று சொன்னவள்.. அவனருகில் வந்தாள்.
   'ஏங்க..? உங்களுக்கு ஜோசியம் ஜாதகத்து மேல நம்பிக்கை இருக்குதா..?"
   'இல்ல. ஏன்..? திடீருன்னு கேக்குற..?"
   'உங்க அம்மா உங்களுக்கு இருவத்தெட்டு வயசுக்குப் பிறகுத்தான் கொழந்த பொறக்கும்ன்னு சொல்றாங்க."
   'ஆமா.. அத எப்போ இருந்தே சொல்லுறாங்க. இப்ப அதுக்கென்ன..?"
   'அதனால.. இப்ப என் வயத்துல இருக்கிற உங்கக் கொழந்தைய கலைக்கணுமாம்." அழுத்தமாகச் சொன்னாள்.
   அவனுக்கு அனைத்தையும் மனத்தில் வாங்கி.. புரிந்து கொள்ளச் சில விநாடிகள் ஆனது. புரிந்ததும்..
   'என்ன சொல்லுற நீ..? அம்மா .. என்ன இதெல்லாம்..?"
   'ஆமாம்பா.. அலைச்சிடணும். எனக்கு எம்புள்ள உசிறு தான் முக்கியம்."
   'என்னம்மா சொல்லுற நீ..? அதுவும் ஒரு உயிருமா.. என்னோட உயிரு. அதப்போயி எப்படி மனசு வந்து அழிக்க சொல்லுற..?"
   'ஆமா. அழிக்கணும் தான்!" உறுதியாகச் சொன்னாள்.
   'முடியாது. என்னால முடியாது. இதுக்கு நா சம்மதிக்கவே மாட்டேன். எனக்கு இந்தக் கொழந்த வேணும். இத்தன நாள் எனக்கு இந்த எண்ணமே வந்தது கெடையாது. ஆனா.. என்னோட வயத்துக்குள்ளேயே ஒரு உயிர் வளருது. அது என்னோட கொழந்த. என்னோட ரத்தம். என்னோட உயிர். அத பெத்து நா அனாதை இல்லன்னு ஊர்பூரா சொல்லிக் காட்டணும். என்னத்தான் நீயும் உம்புள்ளையும் உறவுன்னாலும்.. இது தான் என்னோட உண்மையான ஒறவு. இனிமேல நா அனாத இல்ல.. அனாத இல்ல.." கத்தினாள்.
   'ஏய் மீனா.. நீ அனாத அனாதன்னு நாங்களா சொன்னோம்? நீ தான் உன்னையே அனாதன்னு சொல்லிக்கினு திரிஞ்ச. தோ பாருடி.. நீ உண்மையில அனாத கெடையாது. ஒன்னோட அப்பா என்னோட கூட பொறந்த தம்பி. நீ என்னோட தம்பியோட பொண்ணு தான். அதனால நீ இந்த புள்ளைய பெத்து தான் அனாத இல்லன்னு நிருபிக்கணும்ன்னு இல்ல."
   மீனா அதிர்ச்சியுடன் தன் மாமியாரைப் பார்த்தாள். சக்திவேலுவும் தான்!!
   'ஆமா மீனா. அவன் பேரு அன்பரசு. அவனத்தான் அறிவழகி விரும்புனா. ஆனா.. அவனுக்குப் புடிக்கல. அவன் இங்க இருந்தா கட்டாயப்படுத்தி அறிவழகிய தனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட போறாங்களோன்னு நெனச்சி.. என்னோட வைர நெக்கலச எடுத்துக்கினு போயி பட்டாளத்துல சேந்துட்டான். அவனுக்கு அங்கேயே ஒரு பொண்ணு புடிச்சிபோக.. அந்த பொண்ண கட்டிக்கிட்டான். அவ உன்ன பெத்துட்டு பிரசவத்துல இறந்துட்டா. கை கொழந்தையா இருந்த உன்ன எங்கிட்ட குடுக்கச் சொல்லி  ஆத்தங்கரையில யாருக்கும் தெரியாம அறிவழகிக்கிட்ட குடுத்து அடையாளத்துக்கு நெக்லசையும் கொடுத்திருக்கான். ஆனா.. அறிவழகி கொழந்தைய எங்கிட்ட குடுக்காம.. இந்த விசயத்த மறைச்சி உன்ன வளத்துட்டா.
   ஆனா.. நீ பெரிய பொண்ணானதும் வந்த பிரச்சனையில உன்ன எங்கிட்ட சேத்திடணும்ன்னு கொண்டு வந்து சேத்துட்டா. இந்த விசயம் தெரிஞ்சா ஒனக்கு அவ மேல இருக்கற பாசம் போயிடும்ன்னு உண்மைய யார்கிட்டையும் சொல்லக் கூடாதுன்னு சொல்லி அழுதா. அதனால நானும் உண்மைய ஒங்கிட்ட சொல்லல.
   அதே சமயம் ரத்த சொந்தத்துல தான் சக்திவேலுவுக்கு பொண்ணு அமையும்ன்னு சொன்னதால ஒனக்கு பொருத்தம் பாத்தேன்.  ஒனக்கு மொதோ தாலி நெலைக்காதுன்னு சொல்லிட்டாரு ஜோசியர். எங்க ஒனக்கு எம்புள்ளைய கட்டுனா.. அவனோட உயிருக்கு ஆபத்து வருமோன்னு பயந்து தான் உன்ன வெறுக்கற மாதிரி பேசினேன். ஆனா.. ஒனக்கு வேந்தன் தாலிகட்டிட்டு அன்னைக்கே செத்துட்டான். உன்னோட தோஷம் வெலகிடுச்சி.
   அதனால தான் உன்ன கட்டிக்க போறேன்னு சக்திவேல் சொன்னதும் சரின்னு சொல்லிட்டேன். ஆனா அவனோட தோஷம் இன்னும் முடியல. யோசிச்சி பாரு. ஜோசியர் சொன்னது எல்லாமே நடந்து இருக்குது. அதுல இது மட்டும் எப்படி நடக்காதுன்னு சொல்லுவ..? சொல்லு. ஒனக்கு ஒம்புருஷன் முக்கியமா..? இல்ல.. வயத்துல இப்பத்தான் மொலச்சிருக்கற புள்ள முக்கியமா..? நல்லா யோசிச்சி பாரு."
   பேச்சில் முற்று புள்ளி வைத்தவிட்டாள். மீனா பிரம்மைப் பிடித்தவள் போல் அமர்ந்து விட்டாள்.

                         (தொடரும்)

No comments :

Post a Comment