Thursday 21 June 2012

போகப் போகத் தெரியும் - 14


  பிற்பகல் மணி மூன்று.
   ஊரே அமைதியாக இருந்தது போலிருந்தது. மீனா காலையில் ஊருக்குள் வந்த போது திருவிழாவிற்காகப் போடப்பட்ட தோரணங்கள். மின் விளக்கு அலங்காரங்கள் எல்லாமே திருவிழா களைக்கட்டி இருந்ததை பறைசாற்றியது. திருவிழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிநாடாவில் சீர்;காழி கோவிந்தராஜனின் ;நடந்தால் வாழி காவேரி..... ; என்று தன் கானக் குரலால் எல்லோர் மனங்களையும் கரையவைத்துக் கொண்டிருந்தார்!
   அதன் பிறகும் ஒலித்த அவரது பாடல்கள் அனைத்தும் கானமழையில் ஒவ்வொருவரையும் நனைய வைத்தது.
   ஆனால் காலையில் இருந்த சந்தோசம் பரபரப்பு எதுவுமே இப்பொழுது இல்லை. ஏன்....?
   ஒரு சிறுவன் இரண்டு பட்டு ஜாக்கெட்டை மீனாவிடம் கொண்டு வந்து நீட்டி ;தையக்காரர் குடுக்கசொன்னார் ; என்றான். வாங்கிக் கொண்டு அவனைப்பிடித்துப் 'பெரிய வீட்டில் சக்திவேல் ஐயா இருக்காரான்னு பாத்துக்கினு வா...." என்றாள்.
   அவன் கையை மோட்டார் வண்டியாக்கிக் கொண்டு வாயால் வண்டியின் சத்தத்தைக் கொடுத்துக் கொண்டு ஓடியவன் ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தான்.
   'அவர் வெளியே போய் இருக்காராம். ஆறுமணிக்கி மேலத்தான் வருவாராம்...." சொல்லிவிட்டு இல்லாத வண்டியை ஓட்டிக் கொண்டு சென்றான். அவள் ஏமாற்றமாகத் தன் தாயிடம் வந்தாள்.
   'அம்மா... ஏதிது பட்டு ஜாக்கெட்....?"
   'திருவிழாவுக்காகச் சத்திவேல் தம்பி ரெண்டு பட்டு பொடவ வாங்கித் தந்துச்சி. ஒனக்கொன்னு எனக்கொன்னு..... எனக்கெதுக்கு பட்டுபொடவல்லாம்.....? அதான் ஒன்அளவுக்கே தச்சிட சொல்லிட்டன்...." என்றாள்.
   'சக்திவேல் நமக்கெதுக்குப் பொடவை வாங்கித்தரணும்....?"
   'நமக்கு மட்டுமில்ல. ஊருல எல்லா பொண்ணுகளுக்கந்தான். அவரோட மனசு யாருக்கு வரும்....?"
   புடைவையைக் கொண்டு வந்து மகளிடம் காட்டினாள். ஒன்று சிகப்பு. ஒன்று கரும்பச்சை. குறுக்கும் நெடுக்குமாக ஜரிகை கோடு போட்டு மிக அழகாக இருந்தது.
   'அம்மா எனக்கெதுக்குப் பட்டுபொடவ? எனக்கென்ன பொடவ கட்டிக்கிற வயசா ஆயிடுச்சி....? இதுக்கு மேட்சான கலர்ல ஒங்கிட்ட ஜாக்கெட் இருக்குது..... இந்தா நீயே கட்டிக்கோ....." தாயிடமே நீட்டினாள்.
   'இல்லம்மா. சத்திவேலு மொதோ மொதோ பொடவ வாங்கித் தந்திருக்கு. இத நீ தான் கட்டிக்கணும்."
   'இந்தப் பொடவ வாங்கின பணத்துக்குச் சுரிதாரோ... பாவாடை தாவணி.... இல்லைன்னா... செல்வார் கமிசோ... வாங்கித்தந்தா எனக்கு ஒதவியா இருந்திருக்கும். இந்தப் பட்டுப் பொடவைய கட்டிக்கினா நா காலேஜிக்குப் போவ முடியும்.....?"
   இவள் இப்படி சொல்லி கொண்டிருக்கும் பொழுதே மாதவனின் தங்கை ருக்மணி வந்தாள்.
   'என்ன மீனா நீ.... ஒனக்கு என்ன வேணுமோ அத சத்திவேல் அண்ணங்கிட்ட சொன்னா.... ஒடனே வங்கித்தரப் போறாரு. அவருக்குத்தான் நீன்னா உசிராச்சே......!"
   சொல்லிவிட்டுக் குறும்பாகக் கண்ணடித்துச் சிரித்தாள். ஆனால் மீனா சிரிக்கவில்லை. காலையில் நடந்த நிகழ்ச்சி மனக்கண்முன் வர மனது இலேசாக வலிப்பது போல் இருந்தது. ஏதோ தெரிந்தே தவறு செய்துவிட்ட உணர்வு அவளைக் கவலைக் கொள்ளச் செய்தது.
   'மீனா..... இன்னைக்கி மஞ்சள் நீராட்டுவிழா. வா வெளியே போய்ப் பாக்கலாம். நீ வேணுமின்னா இந்த வெள்ளக்கலர் டிரஷ்சை மாத்திக்கினு வேற ஏதாவது கலரா டிரஸ்பண்ணிக்கினு வா." என்றாள் ருக்மணி.
   'க்கும்..... இந்த ஊருல ஏம்மேல மஞ்சத்தண்ணி ஊத்துர ஆம்பள யார் இருக்கா? எனக்கொன்னும் பயமில்ல. வா போவலாம்."
   வீம்பாக அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள். அங்கே ஒவ்வொரு வீட்டின் வாசல்லேயும் பெரியப் பெரிய அண்டா குண்டான்களில் மஞ்சள் நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
   ஒவ்வொரு வீட்டிலேயும் பெண்கள் தங்களுக்கு முறையான ஆண்கள் யாராவது வருகிறார்களா என்று பார்த்த வண்ணம் மறைந்து இருந்தார்கள்.
   ஆனால் தெருவில் எந்த ஓர் ஆணையும் காணோம்! பெண்களின் சுட்டித்தனம் தெரிந்தே யாரும் வெளியே வரவில்லையா......? என்ன ஆண்கள் இவர்கள்...? மீனா இப்படி யோசித்தபடியே ருக்மணியுடன் நடந்தாள்.
   இந்த விளையாட்டில் ஆண்கள் அக்கரை காட்டவில்லையா....? அல்லது அவர்களுக்கு இந்த ஊர் பெண்களின் மேல் எந்த ஒரு ஈடுபாடும் இல்லையா....? மனது கேட்டக் கேள்வியை ருக்மணியிடம் கேட்டாள் மீனா. 
   'எல்லா ஈடுபாடும்  இருக்குது தான். ஆனா தைரியம் தான் வரமாட்டுது. இப்பக்கூட அதோ பாறேன். ரெண்டு ஆம்பளைங்க நிக்கிறாங்க. எனக்கு அந்த பேண்டு சட்டப் போட்டவர் மேல மஞ்சத்தண்ணிய ஊத்தணும்ன்னுதான் ஆச. ஆனா தைரியம் வர மாட்டுது.....!" ஒரு பெரிய பெருமூச்சியுடன் சொன்னாள்; ருக்மணி.
   மீனா அவள் சுட்டிக்காட்டின ஆண்களைப் பார்த்தாள். ஒருவன் பளீச்சென்ற வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில்! மற்றொருவன் கருநீல பேண்ட் இலநீல சட்டை. இரண்டு பேருமே இவர்களுக்கு முதுகைக் காட்டி கொண்டு அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் ஏதோ முக்கியமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
   'மீனா.... நீதான் தைரியமான பொண்ணாச்சே..... இந்தா இந்த மஞ்சத்தண்ணிய கொண்டு போயி அந்த வெள்ளவேட்டிக் காரர் மேல ஊத்தேன் பாக்கலாம்......?" சவாலாகச் சொன்னாள்.
   'நா எதுக்கு ஊத்தணும்? அவரு எவரோ.... யாரோ....?"
   'பாத்தியா....? ஒனக்கே தைரியம் வர மாட்டுது. நீ இந்த ஊருக்கே செல்ல பொண்ணு. உன்ன யாருமே எதுவுமே கேக்கப்போறதில்ல. இருந்தாலும் நீயே பயப்படுற பாத்தியா....?"
   மீனா யோசனையுடன் ருக்மணியைப் பார்த்தாள்.
   'மீனா... நீமட்டும் இந்த மஞ்சத்தண்ணிய அவர் மேல ஊத்திட்டன்னா.... நா ஒடனே எனக்கு புடிச்ச அந்த பேண்டு போட்டவர் மேல மஞ்சத்தண்ணிய ஊத்திடுவென். உன்னால என்னோட ஆசை நிறைவேறும். ப்ளீஸ் மீனா....."
   கெஞ்சளாக மீனாவிடம் செம்பை நீட்டினாள். மீனாவும் வாங்கிக் கொண்டாள். தன்னை யாரும் எதுவும் செய்து விட மாட்டார்கள் என்ற தைரியம்! ருக்மணியும் அதைத்தானே சொன்னாள். தனக்காக இல்லைன்னாலும் ருக்மணி ஆசையாவது நிறைவேரட்டுமே என்ற நல்ல எண்ணம்!
   கையில் செம்புடன் மெதுவாகச் சென்றவள் அவன் அருகில் சென்றதும் மஞ்சள் நீரை அவனுக்குப் பின்புறமாகச் சட்டென்று கொட்டினாள்;.


   அவன்மீது தண்ணீர் பட்டது தான் தாமதம். அவன் சடேரென்றுத் திரும்பினான். அவனைப் பார்த்ததும் மீனா அதிர்ந்துவிட்டாள்! காரணம் திரும்பியவன் வேறு யாருமில்லை. சின்னதம்பி தான்! அவள் இவனைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. இதுவரையில் சின்னதம்பி வேட்டிக்கட்டி பார்த்ததே இல்லை என்பதும் ஒரு காரணம்.
   அவன் அவளை முறைத்ததும் மீனா தன் பின்னால் வந்த ருக்மணியைத் தேடினாள். அவள் அங்கு இல்லை! திரும்பவும் சின்னதம்பியைக் கவலையாகப் பார்த்தாள். அவன்.....
   'ஒனக்கு என்ன திமிர் இருந்தா...... ஏமேல மஞ்சத்தண்ணிய ஊத்துவ......? உன்ன......" சொல்லிக் கொண்டே அவன் கட்டியிருந்த வேட்டியைத் தூக்கி மடித்துக் கட்டினான்
   அதற்குள் அவனருகில் இருந்த சரவணன் 'மீனா.... ஓடிடு. மாட்டுன இன்னைக்கி அவ்வளவுதான். ஓடிடு....." அவன் கிசுகிசுப்பாகச் சொல்ல மீனா மெல்லப் பின்னால் நடந்து சட்டென்று ஓடத்துவங்கினாள்.
   அவன் துரத்துகிறான் என்று தெரிந்ததும் அதிவேகம் எடுத்து ஓடினாள். ஒருவீடு இரண்டு வீடு என்றில்லை. ஐந்தாறு வீட்டினுள் நுழைந்து கொல்லைபுறத்தில் வெளிவந்து திரும்பவும் வேறு வீட்டில் நுழைந்து.....
   எப்படி ஓடினால் என்ன....? மான்குட்டியைப் பிடிக்கச் சிங்கத்திற்கு சிரமமாக இருக்குமா என்ன....?
   இரண்டு கையையும் தன் ஒரே கையால் பிடித்து இழுத்து கொண்டு வந்தான்.
   'தோ பாருங்க.... எனக்கு நீங்கன்னு தெரியாது. ருக்மணி சொன்னதாலத்தான அப்டி செஞ்சேன். ப்ளீஸ் என்ன விட்டுடுங்க......" அவள் கெஞ்சளாகக் கெஞ்சிக் கொண்டு அவனுடன் வந்தாள். அவன் விடவில்லை. கை இரும்புப்பிடியாகப் பிடித்திருந்தது.
   அவளை நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்தினான். அந்தத் தெருவே வேடிக்கை பார்த்தது.
   'என்ன பாத்துகினே நிக்கிறீங்க? மஞ்சத்தண்ணிய கொண்டு வாங்க......." அவன் கட்டளையிட அங்கிருந்த அனைவருமே.... அண்டா குண்டானில் இருந்தத்தண்ணிரை கொண்டு வந்தார்கள்.
   'தோ பாருங்க.... எனக்கு மஞ்சள்ன்னா அலர்ஜி. வேணாம். ப்ளீஸ் என்ன விட்டுடுங்க. என் டிரஷ்செல்லாம் வீணாயிடும்...... ப்ளீஸ்.... வேணாம்.... வேணா...."
   அவள் சொல்லச் சொல்ல அண்டாத்தண்ணீரை அவள் மீது கொட்டினான். அதுமட்டுமா....? அந்தத்தெருவில் கரைத்துவைத்திருந்த மஞ்சள் தண்ணீர் முழுவதும் மீனாவிற்கே அபிஷேகமாக்கப் பட்டது. அவளுக்கு மூச்சித் திணறியது. இருந்தாலும் அவளால் எதுவும் எதிர்த்துச் செய்ய முடியவில்லை.
   எல்லாம் காலியானதும் சின்னதம்பி தன் மெல்லிய மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு சிரித்தான். மீனா தன் சிவந்தக் கண்களால் அவனைப் பார்த்து முறைத்துவிட்டுப் பேசாமல் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் போவதைப் பார்த்து அனைவரும் சிரித்தார்கள்.
   'மீனா.... நீ ஒரு வாரத்துக்கு குளிக்கவேணாம். தவிர இப்படியே போயி ஆத்துல எறங்கிடாத! அப்புறம் ஆத்துத்தண்ணீயே மஞ்சளாறா மாறிடும்."
   ருக்மணி கை கொட்டிச் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
   'என்ன சொன்ன.....? இந்த ஊருல ஆம்பளைங்களே இல்லியான்னுத் தானக் கேட்ட....? ஒரு ஆம்பளைக்கி உன்னால பதில் சொல்ல முடிஞ்சிதா....? பாத்தியா....?"
   மேலும் சொல்லிச் சிரித்தாள்.
   'என்ன.....? அப்படி வேற சொன்னாளா.....? புடி அவள..... இன்னும் கொஞ்சம் குளிப்பாட்டலாம்......." என்று சொல்லிக் கொண்டே அவன் கிட்டே வர மீனா ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தாள்.

     மணி ஆறேகால்!
   மின்விளக்கின் வெளிச்சம் இருளை விரட்டி விட்டிருந்தது. மின்விளக்குகள் செயற்கை சூரியன்களோ..!
   மீனா சக்திவேல் வீட்டின் கூடத்தில் சோபாவில் அமர்ந்து கொண்டு தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருந்தாள். கமலா ப+ கட்டிக் கொண்டு தரையில் அமர்ந்திருந்தாள்.
   மீனாவிற்குக் கோபமாக வந்தது. ஆறுமணிக்கு வந்தவள் கமலாவிடம் 'சக்திவேலைப் பாக்க வேணும்" என்று சொன்னதற்கு 'உக்காரும்மா வருவார்" என்று சொல்லிச் சோபாவைக் காட்டியவள் ப+ கட்டத் தொடங்கினாள். இதோ பதினைந்து நிமிடம் ஓடிவிட்டது. இன்னும் சக்திவேலைக் காணோம்.
   ஒரு பெருமூச்சுடன் வீட்டை நோட்டமிட்டாள்.
   நான்கு துர்ண்கள் தாங்கிய பெரிய கூடம். தரை பளிங்குக் கற்கள் பதித்துப் பளபளப்பாக இருந்தது. பெரிய டி.வி. சோபா செட் டி.வி;.டி என்று எல்லாம் நவீன பொருட்கள்! வெளியே இருந்து பார்க்கும் பொழுது ஏதோ பழையக் கால பங்களா என்று நினைக்கத் தோன்றினாலும் உள்ளே உள்ளது அனைத்தும் நவநாகரீகப் பொருட்களாகத் தான் இருந்தது.
   அவள் இதற்கு முன் இங்கே ஒரே ஒரு முறை வந்திருக்கிறாள். முதன்முதலில் அறிவழகியுடன் இந்த ஊருக்கு வந்த போழுது இந்த வீட்டிற்கு வந்து ஒரு அம்மாளின் காலில் விழுந்து வணங்கச் சொன்னாள் அறிவழகி! மீனாவும் விழுந்து வணங்கினாள்.
   'மனம் போல மாங்கல்யம் கிடைக்க வேணும்" என்று அந்த அம்மாளும் ஆசிர்வாதம் செய்தாள்.
   அந்த அம்மாள் யார்......? என்ன உறவு...? என்று அவள் அறிவழகியிடம் கேட்கவில்லை.
   ஆனால் இன்று யோசித்தாள்! அந்த அம்மாள் யாராக இருக்கும்? ஒரு சமயம் அவங்கத்தான் சக்திவேலோட அம்மாவா.....? இருக்கலாம்! அவளே பதிலைத் தேடிக் கொண்டாள். ஆமாம்.... இப்போ அவங்க எங்க? அன்று அந்த அறையில் இருந்தார்களே....
   அந்த அறை திறந்து இருந்தது. எழுந்து போய்ப் பார்க்கலாமா....? வேண்டாம். ஏதாவது தவறாக நினைத்துக் கொண்டால்.....? சற்று பெரிய இடத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும் என மனது எச்சரித்தது.
   கடிகாரத்தைப் பார்த்தாள். மேலும் பதினைந்து நிமிடங்கள் கரைந்துவிட்டிருந்தன. கண்கள் தொலைக்காட்சியைப் பார்க்க விரும்பவில்லை. காரணம் மஞ்சள் நீர் பட்டுக் கண்கள் மிளகாய்ப்பழம் போல் சிவந்து இருந்தது மட்டுமல்லாமல் எறிச்சலாகவும் இருந்தன. தொலைக்காட்சியைப் பார்த்தால் கண்களில் இருந்து நீர் ஒழுகத் தொடங்கியது.
   டாக்டர் கொடுத்த சொட்டுமருந்து வேலை செய்தாலும்.... மருந்தை இட்டு கொண்டு பேசாமல் கண்மூடி படுத்திருந்தால் சரியாகிவிடும் என்று சொல்லி இருந்தார். ஆனால் இப்பொழுது அப்படி கண்மூடிக் கொண்டு படுத்துவிட முடியுமா....?
   மனம் திரும்பவும் கடிகாரத்தைப் பார்க்க வைத்தது. செய்ய நினைத்து வந்த காரியம் முடியவில்லை என்றால் காலத்தைக் கண்கள் பார்க்க மனம் கட்டளையிட்டு விடுகிறதே! மேலும் பத்து நிமிடங்கள் எங்கே ஓடியது?
   கால்களே இல்லாத காலம் எப்படித்தான் யாரிடமும் பிடிபடாமல் ஓடிவிடுகிறதோ.....!
   மீனா சிரித்து கொண்டாள். மாடியிலிருந்து சின்னதம்பி இலேசாக விசிலடித்தபடி இறங்கி வந்தான்.
   'தம்பி...... மீனா வந்திருக்குது." என்றாள் கமலா.
   சின்னதம்பி ஆச்சர்ய ஓசையாக விசிலடித்தபடி மீனாவைப் பார்த்துச் சிரித்தான். ஒரேயொரு நொடித்தான்! அவள் கண்களைப் பார்த்தும் 'ஏய்..... மீனா என்ன ஆச்சி....? ஏன் அழுவுற?"
   குரலில் உண்மையான அக்கரையிருந்தது.
   'கேக்க மாட்டீங்க......? நா மஞ்சள் எனக்கு அலர்ஜின்னு சொன்ன பெறகும் அவ்வளவு தண்ணிய ஏம்மேல ஊத்திட்டு.... இப்போ நடிக்கிறீங்களா....?"
   கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டே சொன்னாள்.
   'ஐயோ மன்னிச்சிடு மீனா. வெளியப்போவ கௌம்பியிருந்த நேரத்துல நீ என் டிரஸ்சுல மஞ்சத்தண்ணியக் கொட்டனதும் எனக்குக் கோவம் வந்துடுச்சி. அதனாலத்தான்...."
   'என்னோட புது டிரெஸ்சும் தான் உங்களால வீணாயிடுச்சி. எனக்கு கண்மணி ஆசையா வாங்கிதந்த டிரெஸ் அது." என்று சொன்னவள் காலையில் சின்னதம்பி தன்னிடம் நடந்து கொண்ட விதம் ஞாபகத்தில் வர அவனிடம் பேச விரும்பாதவளாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
   அவனும் அதைப் புரிந்து கொண்டான்.
   'சரி. என்ன விசயமா வந்த?" கேட்டான்.
   'அத உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல எனக்கு. சக்திவேல கூப்பிடுங்க. அவர்கிட்ட தான் சொல்லுவேன்." என்றாள்.
   கமலா நிமிர்ந்து அவளை ஆச்சர்யமாகப் பார்த்தாள். சின்னதம்பி தன்னையும் மீறிவந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு
   'அவர் வெளியே போய் இருக்கார். வர்ற லேட்டாகும். நான் இப்போ அவர பாக்கத்தான் போறேன். என்ன விசயமோ அத எங்கிட்ட சொல்லு. நானே அவர்கிட்ட சொல்லிடுறேன்." என்றான்.
   'இல்ல. நா அவர்கிட்டத்தான் சொல்லுவேன். எவ்ளோ நேரமானாலும் பரவாயில்ல. நா காத்துக்கினு இருக்கேன்." சொல்லிவிட்டுச் சோபாவில் அமர்ந்து கொண்டாள்.
   சற்று நேரம் யோசித்தவன் 'சரி அப்பறம் உன்னிஷ்டம்" என்று சொல்லிவிட்டு வெளியே போய் விட்டான்.

                              (தொடரும்)

  

Tuesday 12 June 2012

போகப் போகத் தெரியும் - 13


   வள் ஓடின வேகத்தைப் பார்த்த மீனாவிற்கு ஆச்சர்யம்! இவ்வளவு ஆசையுடன் இருப்பவளைச் சக்திவேலால் புரிந்து கொள்ள முடியவில்லையா......? எழுந்து மண்ணைத் தட்டிவிட்டு நடந்தாள்;;. அவளுக்கும் சந்தோசம். தானும் முதல்முறையாக சக்திவேலுவை நேராகப் பார்க்கப் போகிறேமே என்ற எண்ணம்!
   கற்பனையில் எண்ணங்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சிறகடித்துப் பறக்கச்செய்யலாம்...... ஆனால் நடைமுறையில் நடப்பது எதுவும் கற்பனையில் பறந்த பறவையாக இருப்பதில்லையே......!!


   கண்மணியின் வீட்டு வாசலில் இரண்டு டாடா சுமோ நின்று கொண்டிருந்தது. அதன் ஒன்றின் மீது ஒருவர் சாய்ந்து நின்று கொண்டிருந்தார். ஆறடிக்குக் குறையாத உயரம். வயது முப்பதுக்குள் இருக்கும். வெள்ளைவேட்டி வெள்ளை சட்டை. சற்று சதைப்பிடிப்பான தேகம் அவரை மேலும் கம்பீரமாகக் காட்டியது. கழுத்தில்  கையில்  கைவிரல்களில் தங்கம் பெரிது பெரியதாக மின்னியது. அவர் அருகில் ஆறு வெள்ளை வேட்டி ஆண்கள்!!
   அவனை மறைவாக நின்று கொண்டு பார்த்து கொண்டிருந்த மீனாவிற்கு அவனின் தூக்கி முறுக்கிவிட்ட மீசையும் இலேசாக சிவந்திருந்த சிறிய கண்களும் சற்று அச்சத்தை மூட்டியது. அதிலும் இந்த வண்டிகள்.... இந்த ஆட்கள்..... யாரையும் அவள் இதுவரையில்; பார்த்ததில்லை.
   வந்தவர்களுக்கு இளநீர் வெட்ட ஓடின வேலையாலை நிறுத்தி 'இவர் யார்.....?" என்று கெட்டாள் சந்தேகமாக.
   'இவர் தான்மா... நம்ம கண்மணி பாப்பாவ கட்டிக்கபோற வேலுத்தம்பி......." அவசரமாக சொல்லிவிட்டு ஓடினார்.
   அப்படின்னா இவர் தான் சக்திவேல்! கணேசன் சொன்ன அத்தனை லட்சணமும் இவரிடம் இருக்கிறது.
   கண்மணியிடம் சற்று நேரத்திற்கு முன் பேசியது ஞாபகத்திற்கு வந்தது. என்ன செய்யலாம்......? சுவர் ஓரத்தில் அலங்காரத்திற்காக வளர்க்கப்பட்ட ரோஜா செடியில் நிறைய இரத்தநிறப் பூக்கள்! அதிலிருந்து ஓர் அழகான பூவைப் பறித்தாள்.
   அதைக் கொண்டு போய் அவனெதிரில் நீட்டிப் புன்னகைத்தாள். உலகத்திற்கே வெளிச்சம் தந்து கொண்டிருக்கும் சூரியனிடமிருந்து குளிர்ச்சியாக இறங்கிவந்த தேவதையைப் போல் அவன் கண்களில் விழுந்தாள். அவன் அதிசயமாகப் பார்த்தான்! அதிலும் தலைமுதல் கால்வரைப் பார்த்தான். தேவதையை நேரில் பார்த்த வியப்புக் கண்களில்!
   'என்ன அப்படி பாக்குறீங்க? என்னைத் தெரியலையா....? நான் தான் மீனா. உங்க கண்மணியோட தோழி! கண்மணி தான் இந்தப் பூவை உங்கக்கிட்ட குடுக்கச் சொன்னாள். இந்தாங்க."
   பூவைச் சிரித்துக் கொண்டே நீட்டினாள். அவன் சற்று யோசித்தவன் பூவை வாங்குவதைப் போல் வந்து சட்டென்று அவள் கையைப் பிடித்தான்.
   'பூவை மட்டுமா....? இல்ல... பூவைக் கொண்டு வந்த பூவையையுமா....?"
   மீனா இதைச் சற்றும் எதிர்பார்க்க வில்லை. கையைச் சிரித்து கொண்டே விடுவிக்க முயற்சித்தாள். முடியவில்லை. இந்தக் காட்சியை ஜன்னல் வழியாக கவனித்த ஒரு ஜோடிக் கண்கள் கோபத்தால் சிவந்தன.
   'ஐயோ கையை விடுங்க..... கண்மணி மேல நீங்க வச்சிருக்கிற அன்பு இவ்வளவு தானா....? "
   அவள் இப்படி கேட்டதும் அவள் கையைவிட்டு விட்டுப் பூவைவாங்கி அழுத்தி முகர்ந்தான். கண்கள் மீனாவையே அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தன.
   அதற்குள் வெளியே போயிருந்த கண்மணியின் அப்பா சண்முகம் அவசர அவசரமாக வந்தார்.
   'வாங்க மாப்புள.... வாங்க.... ஏன் வெளியேவே நின்னுட்டீங்க....? உள்ளே போவவேண்டியது தானே...."
   அவர் அப்படி கேட்டதும் அங்கே நின்றிருந்த மோட்டார் வண்டியைக் கோபத்துடன் இவன் கண்களால் காட்டினான். மீனாவும் பார்த்தாள். இந்த வண்டி சின்னதம்பியுடையது அல்லவா....? மனத்தில் இலேசான மகிழ்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது.
   'ஓ..... தம்பியும் வந்திருக்குதா....? இருந்தா என்னப்பா....? நீங்களும் உள்ள வாங்க. எனக்கு ரெண்டுபேருமே வேண்டியவங்க தானே..... உள்ளாற வாப்பா...." சொல்லிக் கொண்டே அவர் உள்ளே ஓடினார்.
   அவன் பேசாமல் அலட்சியமாக நின்றிருந்தான். மீனா தான் அவன் கையைக் பிடித்து இழுத்து அழைத்தாள்.
   'என்ன நீங்க? இந்த விட்டு மாப்பிள்ளை! நீங்க உள்ளே வராம வெளியே நிற்பதா.....? வாங்க உள்ள....."
   அவளிழுக்க அவன் வந்தான். உள்ளே சண்முகத்திடம் பேசிக் கொண்டிருந்த சின்னதம்பி மீனாவையையும் அவள் பிடித்திருந்தக் கையையும் பார்த்து முறைத்தான். அந்த முறைப்பில் தெரிந்த கோபம் அவளை அவள் பிடித்திருந்த கையை விட்டுவிட வைத்தது.
   ஒரு சிலரின் பார்வையே கட்டளையிடும்!
   மீனா கண்மணியின் அருகில் வந்து நின்று கொண்டாள். சின்னதம்பி பரிசு பொருளை நீட்டி 'பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்மணி " என்றான். அவள் நன்றி சொல்லிவிட்டு வாங்கிக் கொண்டாள்.
   வேலுவும் ஒரு பரிசை நீட்டினான்.
   'ஒனக்காகவே செய்யச்சொல்லி வாங்கிக்கினு வந்தேன் கண்மணி." என்றான். இலேசான புன்முறுவளுடன் வாங்கிக் கொண்டாள்.
   'கண்மணி உள்ள போயி சாப்புட ஏதாவது கொண்டாம்மா....." சண்முகம் சொல்லக் கண்மணி மீனாவின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு நடந்தாள்.
   அவர்கள் போனதும் வேலு கேட்டான்.
   'இங்க ஏதுக்கு வரணும். அடுத்தவனுக்கு நிச்சயமான பொண்ணு கண்மணின்னு தெரியாதா.....?" குரல் கரகரப்பாகவும் கோபமாகவும் வந்தது.
   அவன் இவனிடம் பதில் சொல்லவில்லை. 'மாமா.... நா மீனாவ கூட்டிக்கினுப் போவத்தான் வந்தேன்.... அத்தை மீனாவைச் சீக்கிரம் கௌம்பி வரச் சொல்லுங்க." எனறான் கண்மணியின் தாயிடம்.
   'என்ன மீனா ஒங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணா....? அவ எங்கிட்ட சொல்லவேயில்லப்பா....."
   அவன் எதுவும் பேசாமல் இருக்க சரஸ்வதி மீனாவைக் கூப்பிட உள்ளே சென்றாள்.
   'ஓ..... இந்த அல்லியைப் பாத்துத்தான் அந்த ரோஜாவ வேணான்னு சொன்னியா....? நான் ஏதோ நீ இந்த ஊர் நல்லதுக்காகத் தான் விட்டுக் கொடுத்துட்டியோன்னு நெனச்சேன்."
   சொல்லிக் கொண்டே கையில் இருந்த ரோஜாவை அழுத்தமாக முகர்ந்தான். சின்னதம்பியின் கண்கள் இதைக்கண்டு மேலும் சிவந்தன.
   'ஊருக்காக காதலிக்கிற பொண்ணை விட்டுக் கொடுக்க நான் ஒன்னும் கோழையில்லை." சூடாக வந்தது பதில்.
   'அப்படின்னா....?"
   'கண்மணியை நான் காதலிக்கலைன்னு அர்த்தம்" அழுத்தமாகச் சொல்லிவிட்டுச் சண்முகத்திடம் திரும்பினான். 'மாமா இன்னைக்கி ஊருல திருவிழா தொடங்குது. இந்த வருஷம் தேர் ஊர்வலம் இருக்குது. நீங்க எல்லாரும் வந்து விழாவுல அவசியம் கலந்துக்கணும். நேரடியா வந்து அழைக்கத்தான் வந்தேன் மாமா. அவசியம் வந்திடுங்க." என்றான்.
   'சரிப்பா....." என்றார் அவர்.
   'மாமா.... நீங்க வேணும்ன்னா அங்க போயிக்கோங்க. ஆனா கண்மணிய அழைச்சிக்கினு போவக்கூடாது. நான் ஒன்னும் மத்தவங்கள மாதிரி என்னுடையவளை ஊர்ஊரா சுத்த அனுப்புறவன் கெடையாது." என்றான் வேலு.
   சின்னதம்பி பற்களைக் கடித்தான். அவனுக்கு மீனாவின் மீது கோபம் வந்தது. ஆனால் அவளைக கேள்வி கேட்கத் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று நினைக்கும் பொழுது மனது வேதனையால் வெந்தது. அவனால் வேலுவைப் பார்த்துக் கோபமாக முறைக்க மட்டுமே முடிந்தது.
   வேலு அவன் பார்வையை இலட்சியப் படுத்தவில்லை. கையில் இருந்த ரோஜாவை இன்னும் அழுத்தமாக முகர்ந்து கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். அவன் போனதும் மீனா அவசர அவசரமாக வந்தாள்.
   'இதோ பாருங்க....... நான் இப்போ உங்கக் கூட வர முடியாது. எனக்கு இங்க ஒரு வேலையிருக்குது. அது முடிஞ்சதும் நாளைக்கி நானே வந்துடறேன்." கோபமாகச் சின்னதம்பியைப் பார்த்து சொன்னாள்.
   'எந்த வேலையின்னாலும் பரவாயில்லை. நீ இப்பவே என்கூட வந்தாகணும். கௌம்பி வா. வெளிய காத்துக்கினு இருக்கேன்."
   அவன் சொல்லிவிட்டு இல்லையில்லை. கட்டளையிட்டுவிட்டு அவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் போய்விட்டான். அதற்குள் கண்மணி அவளின் தோள்பையைக் கொண்டு வந்து நீட்ட அவளைக் கவலையுடன் பார்த்துக் கொண்டே பையை வாங்கிக் கொண்டு கிளம்பினாள்.
   வெளியே வந்த சின்னதம்பி வேலுவைத் தாண்டிப் போகும் பொழுது 'அல்லி கொடுத்த ரோஜா அபாரமான வாசனையாத்தான் இருக்குது." என்று சொல்லிக் கொண்டே ரோஜாவை வேலு அழுத்தமாக முகரவும் சின்னதம்பி அவனெதிரில் வந்து நின்று அவன் கையில் இருந்த பூவைச் சட்டென்று பிடுங்கி நசுக்கிக் கீழே எறிந்தான்.
   இதை வேலு சற்றும் எதிர்ப ;பார்த்திருக்கவில்லை. அவன் உடனே கோபத்துடன் சின்னதம்பியின் சட்டையைப் பிடிக்கச் சின்னதம்பியும் அதே கோபத்துடன் வேலுவின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தான்.
   'உன்னோட வழியில நான் குறுக்க வரலை. அதே மாதிரி நீயும் என்வழியில குறுக்க வராத......" பற்களைக் கடித்துக் கொண்டு சின்னதம்பி சொன்னான்.
   'நானா குறுக்க வரலை. அவளாத்தான் வந்து ரோஜாவ எங்கிட்ட நீட்டினா..... இப்போ எனக்கு அவ உரிமை......"
   அவன் சொல்லி முடிப்பதற்குள் மீனா இவர்களின் நிலையுணர்ந்து அங்கே ஓடி வந்துவிட்டிருந்தாள்.
   'சக்திவேல்....."
   அவள் கத்திய வேகம் இருவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. வேலுவின் கண்களில் மிகப் பெரிய ஆச்சர்யம்!!!
   அவள் தன்னை அல்லவா  ;சக்திவேல் ; என்று அழைத்தாள்!!   
  
   மீனா வேலுவைச் ”சக்திவேல்” என்று அதட்டி கூப்பிட இருவருமே அவளை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள். இதை மீனா கவனிக்கவில்லை. அவள் திரும்பவும்
   'சக்திவேல் முதல்ல கையை எடுங்க. நீங்களும் தான். என்ன ஆச்சி உங்க ரெண்டுபேருக்கும்?  எப்படி உங்களுக்குள்ள இப்படியான விரோதம் வந்தது? கையை எடுங்க முதல்ல." என்றாள் கோபமாக!
   இருவருமே ஒரே நேரத்தில் சட்டையை விட்டுவிட்டு கையை எடுத்தார்கள். சின்னதம்பி அவனை விட்டதும் மீனாவின் கன்னத்தில் ;பளார் ; என்று அறைந்தான். அவளின் கண்கள் கலங்கிவிட்டது. 'மீனா... எல்லாம் உன்னாலத்தான் வந்தது. வந்து ஒடனே வண்டியில ஏறு." என்றான் கோபமாக.
   அவள் கலங்கின கண்களுடன் வேலுவைப்பார்த்தாள். அவனும் என்ன செய்வதென்று அறியாமல் கைகளைப் பிசைந்தான்.
   'பாருங்க சக்திவேல்.... உங்க எதிர்லேயே என்னை அடிச்சிட்டார். நீங்க எதுவும் கேக்கமாட்டிங்களா.....?"


   அவள் வேலுவைப் பார்த்து கேட்க அவன் அவளை ஆச்சர்யம் மாறாமல் பார்த்தான்.
   'சக்திவேல்.... எனக்கு அவர் கூட போவ இஷ்டமில்லை. நான் உங்கக் கூடவே வர்றேன். நீங்களே என்னை வீட்டுல விட்டுடுங்க."
   சின்னதம்பியைக் கோபமாகப் பார்த்தபடி சொன்னாள்.
   இப்பொழுது வேலுவுக்குப் புரிந்துவிட்டது. அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சின்னதம்பியை நோக்கினான். அவன் மீனாவை முறைத்து கொண்டு நின்றிருந்தான். அங்கே கண்மணி அவள் அப்பா அம்மா வேலையாட்கள் மற்றும் வேலுவின் சகாக்கள் அனைவருமே மீனாவை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
   மீனா இப்பொழுது வேலுவின் கையைப் பிடித்து கொண்டாள். அவளுக்குச் சின்னதம்பியின் மீது அவ்வளவு கோபம். இப்பொழுது அவன் அவளை முறைத்துப் பார்த்தது இன்னும் ஆத்திரத்தை அதிகமூட்டியது. அதனால் தான் அவள் வேலுவின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
   ஆனால் அவள் அப்படி பிடித்ததும் சின்னதம்பி கோபமாக அவளருகில் வந்தான். மீனா மிரண்டு போய் வேலுவின் முதுகுப்புறமாக ஒளிந்தாள். அவளின் அறியாச் செய்கையால் சின்னதம்பி சற்றுத் தன்னை அமைதிப்படுத்தினான்.
   'மீனா... வா போவலாம்....."
   'இல்லை. நான் வரமாட்டேன். நானு சக்திவேலு கூடவே போறேன்." என்றாள் மிரண்டவளாக.
   'அவர் சக்திவேல் கிடையாது." என்றான் சின்னதம்பி மெதுவாக.
   'என்ன.... இவரு சக்திவேல் கெடையாதா.....?" அதிர்ச்சியுடன் வேலுவைப் பிடித்திருந்த கையை விட்டாள்.
   'ஆமா. இவர் சக்திவேல் கெடையாது. வெறும் வேல்."
   அப்படி சொன்ன சின்னதம்பியை முறைத்தான் வேல். மீனாவிடம் திரும்பினான். 'மீனா.... நான் வெறும் வேல் கெடையாது. வெற்றிவேல். நீ வா. நம்ம வீட்டுக்கு போவலாம்." மீனாவின் கையைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்தான்.
   நம்பாதவளாக நின்றிருந்த மீனா வெற்றிவேல் தன்னைக் கையைப்பிடித்து இழுத்ததும் கையை உதறினாள். அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
   'நீங்க வெறும் வேல்ன்னு ஏன் எங்கிட்ட சொல்லல....?" கேட்டாள்.
   'சக்திவேலே தன்னோடப் பேர சொல்லாதப்போ நான் எதுக்கு சொல்லணும்...? தவர நான் ஒன்னும் வெறும் வேல் கெடையாது. வெற்றிவேல். வா... போலாம்....."
   திரும்பவும் அவள் கையைப்பிடித்து இழுத்தான். இப்பொழுது சின்னதம்பி அவன் கையைத் தட்டிவிட்டு மீனாவின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு போனான். மீனா பேசாமல் அவனுடன் சென்றாள்.
   அன்பு சொல்லும் உண்மை அடிப்பணிவதுதானே...
   வெற்றிவேல் மீனாவைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டு நின்றிருந்தான். அதில் யோசனை அதிகமாக இருந்தது.
   சின்னதம்பியின் மோட்டார் வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த மீனா.... வேலுவைத் தாண்டிப்போகும் பொழுது சொன்னாள்..
   'வேலு நீங்க இப்போ வெறும் வேலுத்தான். பேசாம எங்க சக்திவேலுக்கூட சேந்துக்கங்க. உங்களுக்கு வெற்றி தானா வரும். அப்புறம் நீங்க உண்மையிலேயே வெற்றி வேலுத்தான்." என்றாள் சத்தமாக.
   வெற்றிவேல் அவள் போய் மறையும்வரைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்!!


  ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²   ²²²


   நெடுஞ்சாலைக்கு வந்ததும் சின்னதம்பி வண்டியை நிறுத்தி அவளை இறங்கச் சொல்லப் பேசாமல் இறங்கிக் கொண்டாள். அங்கே பேரூந்துக்காக காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டான் 'ஏம்மா.... நா போவும் போதே இருந்தீங்க. இன்னுமா பஸ் வரல...?"
   'மூனு பஸ்சு போச்சிப்பா. ஒன்னுக்கூட நிக்கல. இப்பெல்லாம் ஒருத்தர் ரெண்டுபேருன்னா பஸ்ச நிறுத்தமாட்டுறாங்கப்பா......" என்றாள் அவள்.
   திரும்பி மீனாவைப் பார்த்தான். அவள் கோபமாக நகத்தைக் கடித்துக் கொண்டு நின்றிருந்தாள். அவன் அவளைப் பார்த்ததை உணர்ந்து அவனருகில் வந்தாள்.
   'தோ பாருங்க. நீங்க இன்னைக்கி எங்கிட்ட இப்டி நடந்துகணுது ரொம்ப தப்பு. நா எதுக்காக இந்த மாத்தூருக்கு வந்தேன் தெரியுமா....? அது தெரியாம என்னை அடிச்சிட்டீங்க. என்னை என்னோட அம்மா கூட அடிச்சது கெடையாது. அதுமட்டுமில்ல. என்னோட கையப்புடிச்சி இழுத்துகினு வந்தீங்க. எந்த உரிமையில எங்கையபுடிச்சீங்க?  எங்கிட்ட உங்களுக்கு ஏதாவது வம்புவளக்கிறதே வேலையா போச்சி. இருங்க..... இன்னிக்கி நா எல்லாத்தையும் சக்திவேல் கிட்ட சொல்லுறன்."
   பற்களைக் கடித்துக் கொண்டு கோபமாகப் பேசினாள்.
   'நீ சக்திவேலுன்னு நெனச்சி வெற்றிவேல் கையப் புடிச்சா என்னைப் பாத்துக்கினு சும்மா இருக்கச் சொல்லுறியா....?" கேட்டான் மெதுவாக.
   'எனக்குத் தெரியாம நடந்த தப்பு அது. உங்களுக்குத் தான் தெரியுமே.... மொதல்லேயே சொல்லி இருக்கலாம் இல்ல..? இருந்தாலும் நீங்க செஞ்சது தப்புத்தான். நா இத சக்திவேல்கிட்ட சொல்லாம இருக்கப் போறது இல்ல." என்றாள்.
   தூரத்தில் பேரூந்து வரும் ஓசை! மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.
   'நெஜமா இன்னைக்கி சொல்லப்போறியா......?" மீனாவை அழுத்தமாகப் பார்த்தபடிக் கேட்டான்.
   'ஆமாம்" அவளும் அழுத்தமாகப் பதில் சொன்னாள்.
   'அப்படின்னா... நீ என்னை விரும்பலையா.....?"
   'இல்லைன்னு அதுதான் அன்னைக்கே சொன்னேனே....."
   'அன்னைக்கி சொன்னே... இப்போ சொல்லு. நீ என்ன விரும்புறன்னு"
   'முடியாது."
   'முடியாது......?"
   'முடியாது."
   அவள் அழுத்தமாகச் சொன்னதும் சட்டென்று திரும்பி நடுத் தெருவில் வந்து நின்றான். பேரூந்து மிகமிக வேகமாக அதே சமயம் சற்றுத் தொலைவில் தான் வந்து கொண்டிருந்தது.
   அவனுடைய இந்தச் செய்கையை மீனா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை! அதிர்ச்சியில் அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவல்லை. தன்னையும் அறியாமல் தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு கத்தினாள்.
   'ஐயோ.... வேண்டாம். நா உங்களைத்தான் விரும்புறேன்...."
   ட்.....ரா....க். பேரூந்து தார் சாலையைத் தேய்த்து அவனுக்கு மிக அருகில் நின்றுவிட்டது. மீனா முகத்தை மூடியிருந்த கைகளை அச்சத்துடன் மிக மெதுவாக விலக்கினாள். அதற்குள் கண்டெக்டர் இறங்கிச் சின்னதம்பியிடம் வந்தார்.
   என்ன தம்பி. இப்டி செஞ்சிட்டீங்க? நாங்க ரொம்ப பயந்துட்டோம்பா....." என்றார் நடுங்கும் குரலில்.
   ‘நீங்க பயபடுறது இருக்கட்டும். ஒருத்தர் ரெண்டு பேருன்னா வண்டிய நிறுத்தம போறிங்களாமே...... என்ன விசயம்? ஒருத்தர் ரெண்டுபேரெல்லாம் மனுஷன் இல்லையா....?"
   'இல்ல தம்பி நேரம் போதலை..... அதனாலத்தான்......" பேச்சை இழுத்தார்.
   'சரிசரி இத்தோட நிறுத்திக்கங்க. இன்னையிலேர்ந்து எங்க ஆளுங்க கங்காணிப்பாங்க. யாராவது இருந்து பஸ் நிக்காம போச்சின்னா.... அந்தப் பஸ்சு அப்புறம் இந்த வழியில போவமுடியாது." என்றான் சற்று கோபமாக.
   'சரிப்பா இனிமேல இப்டி நடக்காது." என்றார் அவர் பணிவாக. தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தான். 'இந்த பொண்ணையும் அந்த அம்மாவையும் ஆத்தூர்ல எறக்கிவிடுங்க." என்றான் அதிகாரமாக.
   மீனாயைப் பார்த்தான். அவள் இவனை முறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள்.
   'ம்.... வந்து பஸ்சுல ஏறு." அவன் அதிகாரத்துடன் அழைக்க அமைதியாக வந்து ஏறினாள். அப்பொழுது மிக மெதுவாகச் சொன்னான்.
   'என்மேல இவ்ளோ ஆசைய வச்சிக்கினு எல்லாத்தையும் மூடி மறச்சிடலாம்ன்னு பாத்தியா.....?"
   அவன் கிசுகிசுப்பாகச் சொல்ல மீனா பஸ்சில் ஏறக் கிளம்பியது.

                                           (தொடரும்)